வேடனும் ஒரு குயிலும்
ஓர் அடர்ந்த காடு, அக்காட்டினுள் ஒரு பெரிய
வீடு, அவ்வீட்டினுள் ஒரு வேடன். அவ்வேடனுக்கு மக்களோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல்
காட்டிற்குள் வாழ வந்துவிட்டான். அப்படி வந்த அவனுக்கு அக்காட்டில் வேட்டையாட ரொம்ப
நாளா ஆசை.
என்ன
?
தனியாக
இருக்க வேண்டும்.
ஏன்?
காட்டில்
இருக்கும் விலங்குகளைக் கண்டு ரசிக்கவேண்டும், அதனோடு, பேச வேண்டும் அதனை வேட்டையாடவேண்டும்.
சரி!
இருந்தாலும்
அவனுக்கு கொஞ்சம் பயம், அதனால் அவன் வீட்டைச் சுற்றி வேலியமைச்சு. விலங்குகள் இடம்
இருந்து பாதுகாப்பாக இருந்தான்.
முதல் நாள்
– வேட்டையாடுவதற்காக காட்டிற்குள் சென்றான் அன்று முழுவதும் சுற்றி திரிந்து எந்த விலங்குகளையும்
பார்க்காமல் ஏமாந்தான் வேடன்.
இரண்டாவது நாள்
– ஆயூதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு காட்டிற்குள் புகுந்தான். புகுந்தவுடனே அவன் கண்ணுக்கு
பாம்பு தென்பட்டது. பாம்பைப் பார்த்து
வேடன் கூறினான் போகும் போது முதலில் உன்ன தான் பாக்கணுமா, டே முட்டாள் என்ன பாக்குரது
இருக்கட்டும், இப்படி ஒவ்வொரு நாள் காட்டுக்குப் போராயே யார பாக்க, தெரியலையே, முதல்ல அத முடிவு செய்யடா,
மூன்றாவது நாள்
– தன்னிடம் இருந்த ஆயூதங்களை குறைத்து விட்டு மீண்டும் காட்டிற்குச் சென்றான். வெகு தூரம் நடந்து விட்டான், எதையும் பார்க்க முடியலயே
என்று வருத்தம் ஒருபக்கம், தண்ணீர் தவிப்பு ஒருபக்கம் என்ன பன்றதுன தெரியாமல் ஒரு மரத்தடியில்
உட்கார்ந்துவிட்டான். உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில மயங்கிவிட்டான். அந்த மரத்தில் இருந்து
ஒரு குரங்கு கிழே இரங்கி அவனை எழுப்பிப்
பார்த்தது எந்திரிக்கவேயில்ல, பாவம் என்ன பண்ரதுனே தெரியல, அவன் அருகில் ஒரு காகிதப்
பை இருந்தது, அதை எடுத்து அருகாமையில் ஒரு
ஆறு ஓடி கொண்டு இருக்கின்றது. அந்த ஆற்று தண்ணீரை காகித பையில் எடுத்துக் கொண்டு வந்து
அவன் மேல் தெளித்தது. அவன் மெல்ல மயக்கம் தெளிந்த பிறகு அந்த தண்ணீரைக் குடித்தான்.
வேடனைக் கண்டு குரங்கு கூறியது, ஏன் இவ்வளவு
கஷ்டப்படுற.
நான்காவது நாள்
– ஆயூதங்களே இல்லாமல் தண்ணீர் குடவையுடன் மீண்டும் காட்டிற்குச் சென்றான். இன்றாவது
வேறு திசை மாறி போவும் என்று நினைத்து திசை தெரியாமல் ஓர் இடத்தில் உட்கார்ந்து விட்டான்.
இனி என்னால் நடக்க முடியாது கால் வலி அதிகமாயிடுச்சி, பசியொருப்பக்கம் என்ன செய்வது
என்று தெரியல பொழுதாயிட்டே இருக்கு, சரி! நடப்போம், கொஞ்ச தூரம் நடந்தவுடன் ஆற்றை பார்த்துவிடுவான்.
பசியை போக்குவதற்க்கு மீன் பிடித்து சுட்டு சாப்பிட்டு பசியை போக்கினான். பொழுதாயிடுச்சி,
மழ வேர வரமாதிரி இருக்கு சரி! போவோம் மழ வந்தா பாக்கலாம், இரவுமாகிவிட்டது. ஒரு பாரை
குகையைக் கண்டதும் அங்கே ஒதுங்கிடுவான். மழைவந்ததும் அந்த இடத்தில் வாழும் நரி ஒன்று வந்ததது. வேடனை கண்டதும் பரிதாபப்பட்டது.
சரி! இருக்கட்டும் விடு என்று நினைத்துவிட்டு வேடனை பாதுகாக்க வெளியே காத்து கொண்டு
இருந்தது. வேடன் ஆச்சரியப்பட்டான். நரி கூறியது திசை தெரியாமல் வந்தால் திசை தெரியாமல் போயிடுவ மகனே!
ஐந்தாவது நாள்
– நடு காட்டில் இருந்து மீண்டும் அவனது வேட்டையை தொடர்கிறான். அதிசயமாக ஒரு மானைப் பார்த்தான், அம்மானை எப்படியாவது கொன்று விடவேண்டும்
என்று துடித்தான். பின்னாடி ஒரு மான் இருப்பதைப் பார்த்துவிட்டு அம்மான் மீது வைத்த
குறியை தப்பிவிடுகிறான். டே வேடா! அது இரண்டும்
உறவாடிகிறது அதை போய் கொல்ல நினைக்கிறயேடா.
சரி!
சரி!
ஆறாவது நாள்
– அக்காட்டில் இருந்து வேறு காட்டிற்குச் சென்று விட்டான். அக்காட்டில் வழி தெரியாமல்
முள் புதரில் மாட்டிக் கொண்டான். அவன் சத்தமிட்டதைக் கண்டு யானை ஓடி வந்தது, பரிதாபத்துடன் வேடனுக்கு யானை உதவியாக இருந்தது. வழி
சேர்த்த யானைக் கூறியது முடியாத வேலைய ஏன்டா
முயற்சிக்கிற.
ஏழாவது நாள்
– வேடன் அவன் வீட்டை நோக்கி பயணம் செய்தான். இந்த ஆறு நாட்கள் விலங்குகளை வேட்டையாடி
நான் ஏமாந்து விட்டேன். இன்று ஒருநாளாவது பறவைகளை வேட்டையாடுவோம். என்று மனதில் நினைத்துவிட்டு
வேட்டையை தொடர்கிறான்.
ஓர்
உயர்ந்த தென்னை மரத்தை கண்டு கிளிகள் ஓடியது,
அவனும் ஓடினான் கிளிகள் அம்மரத்தின் பொந்தில் நுழைந்தது சிறிது நேரம் கழித்து சத்தமிட்டது.
வேடன் மரத்தின் அடியில் உட்கார்ந்து விட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டு இருந்தான். கிளி
வேடனைப் பார்த்து கூறியது, டே முட்டாள் நீ
ஓடி வந்து பிடிப்பதற்கு உன்னை போல் நான் வேடன் அல்ல. வேடிக்கையாளர் டா என்ன வேடிக்கை
மட்டும் தான் பார்க்க முடியும் என்று.
மீண்டும்
வேடன் ஏமாந்தான். தொடர்ந்து வழியில் கூட்டம் கூட்டமாக புறாக்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான். இன்று தான் நான் நினைத்த அளவிற்கு
வேட்டையாடப்போகிறேன் என்று மகிழ்ச்சியாக புறாக்கள் உட்கார்ந்த இடத்தில் ஒரு வலையை வீசிவிட்டு
வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான். ரொம்ப நேரமா ஒரு புறாவ கூட காணம், பொழுதுவேற
ஆயிடுச்சு என்ன பன்னரது தெரியல, இதுங்கெல்லாம் எங்கடா போயிருக்கும், சரி! சரி! வருட்டும்
இன்னும் கொஞ்ச நேரம் இருப்போம். பொழுதுவேற சாஞ்சிறுச்சி ஒரு புறா மட்டும் வருது, அந்த
புறாவை பாத்துட்டு எங்க போவுது, அதைப் பாக்கலாம். அந்தப் புறா போயும் ரொம்ப நேரமாச்சி
கூடுல அடங்கியிருக்குமா என்று நினைத்து விட்டு சென்று அந்த இடத்தைப் பார்க்கிறான்.
பெரிய கிணறா இருக்கு எல்லா புறாவும் இங்கதா அடங்கியிருக்கா சரி! சரி! பொழுது சாஞ்சிடுச்சி
இங்கே இருக்கலாம். காலையில எழுந்து எல்லா புறாவையும் பிடிச்சிட்டு போயிடலாம். காலையில
எழுந்து பார்த்தான் ஒரு புறாகூட இல்ல. வேடனைப் பார்த்து ஒரு புறாக் கூறியது டே! ஒரு
விலங்கவே உன்னால பிடிக்கமுடியல எங்கல எப்படி பிடிக்கமுடியும் உன்னால,
எட்டாவது நாள்
– ஒரு வாரம் சுற்றி திரிந்து எதுவும் பிடிக்கவில்லை இன்று எதையாவது பிடிச்சிட்டு போலாம்.
தொடர்கிறான், மீண்டும் அந்தப் பாம்பைச்
சந்திக்கின்றான். அதை பார்த்து மறுபடியும் உன்னையே பார்குரன், இன்னைக்கு பொழப்பு அவ்வளவுதான்.
சரி!
சரி! நீ எங்க போரனு பாக்குரன். பெரிய
மரத்தில் குயில் கூவுது, காகம் கரைந்து கொண்டு இருந்தது. வேடன் பார்கிறான்
குயிலும் கூவுகிறது, காகமும் கரைகிறது என்னவா இருக்கும் சரி இருக்கட்டும். இந்தப் பாம்பைப்
பார்ப்போம், அட அதுக்குள்ள எங்கடா போச்சி, மீண்டும் காகமும், குயிலும் சத்தமிட்டது.
அம்மரத்தை மீண்டும் பார்க்கிறான். பார்த்ததும் ஆச்சிரியப்படுகின்றான். இரண்டுக்கும்
இடையில் இருக்கின்றாயே யாருக்கு இறையாகப்போரயோ ?
வேடன்
குயிலைப் பார்க்கின்றான், குயிலும் வேடனைப் பார்க்கின்றது. காகம் குயிலை பார்க்க, குயில்
பாம்பைப் பார்க்கின்றது , குயில் காகத்தை பார்க்க, காகம் வேடனைப் பார்க்கின்றது. இப்படி
பார்க்க எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டது பாம்பு. வேடனைப்
பார்த்து குயில் கூறியது. நீ கெட்டு என்ன பார்க்க,
நான் கெட்டு காகத்தைப் பார்க்க, அதுவும் கெட்டு உன்ன பார்க்க – இப்படி எல்லாத்தையும்
கெடுத்து நீயும் கெட்டு போரயே! இது உனக்கே ஞாயமா?
பாம்பு - வேடனைப் பார்த்து சொன்னது. முதலில் நீ நினைத்து வந்த காரியம் உறுதியாக இருக்கவேண்டும். உன் மீது நம்பிக்கை வை
அப்பதான் வாழ்க்கையில உறுப்படியாவருவ. என்ன நம்பிக்கை – உம் – இதுவே தெரியல நீ எல்லாம்
எங்க உறுப்பட போர “தன்னம்பிக்கை”