Monday, April 25, 2016

நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவம் - கட்டுரை

நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவம்

     ஒவ்வொரு மனித சமூதாயமும்  தனக்கென ஒரு மருத்துவ அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. அதனை சமூக நிறுவனம் என்றே கூறலாம். நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாததாகும். நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் என்பர். இவைகை வைத்தியம், நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், இயற்கை வைத்தியம் என்றெல்லாம்1 கூறுவார்.( ETHNOLOGY MEDICINE, FOLK MEDICINE, POPULAR MEDICINE, POPULAR HEALTH CULTURE, ETHNOIATRY,  ETHNOATRICS) மிகப் பழமையான மருத்துவ முறை என்று ஆயூர்வேத மருத்துவ முறையைக் குறிப்பிடுவார். நாட்டுப்புற மருத்துவம் வேத காலத்திலேயே நடைமுறையில் இருந்தது. அறிவியல் நாகாரிக இயந்திர வளா்ச்சி மருத்துவமுறை வழக்கில் உள்ளது எனக் குறிப்பிடத்தக்கது.

     நாட்டுப்புற மருத்துவ முறை பற்றி இந்திய நாட்டில் விரிந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. பழங்குடிகளை ஆராய்ந்து மேலைநாட்டு மானிடவியலறிஞர்கள் நாட்டுப்புற மருத்துவம் பற்றி சில குறிப்புகளை எழுதியுள்ளனார். இம்மருத்துவ முறை கிராமப்புற மக்களின் பண்பாட்டோடும், பழக்கவழக்கத்தோடு சமூக அமைப்போடும் பின்னிப்பிணைந்துள்ளது. அவர்களது நம்பிக்கைக் கேற்ப் நவீன மருத்துவ முறைகளையும் மேற்கொள்கின்றனா். பழங்குடி மக்களிடையேயும் நாட்டுப்புற மருத்துவம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவை!

வீட்டு வைத்தியம்
            சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்றவை வீட்டுப் புழக்கத்திற்கான பொருள்கள். இவை நோய்களைத் தீா்க்கும் மருத்துவ குணம் பெற்றவையாகவும் திகழ்கின்றன. வீட்டுச் சமையலுக்கான பயன்பாட்டு பொருள்களே மருந்துகளாகி நோய்களைப் போக்க உதவியதால் இது வீட்டு வைத்தியம் எனப் பெயர் பெற்றது. தங்களது அனுபவத்தின் அடிப்படையில் செய்திருக்கும் மருத்துவம் வீட்டு வைத்தியமாகும்.

பரம்பரை வைத்தியம்
            தந்தை மகனுக்குச் சொல்ல மகன் அவன் மகனுக்குச் சொல்ல ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொன்ன தொழில் முறையான மருத்துவ முறை பரம்பரை வைத்தியம் ஆகும்.

இயற்கை வைத்தியம்
            ஒவ்வொரு மனிதனிடமும் நோய் வராமல் தடுக்கும் சக்தியும், நோய்வந்தால் அதனைத் தடுக்கும் சக்தியும் இயற்கையாகவே அமைந்துள்ளது. இதை இயற்கை மருத்துவம் ஆகும்.

மூலிகை வைத்தியம்
            மருத்துவ குணங்கள் அடங்கிய செடி, கொடி, வேர், தாவர வகைகளைக் கொண்டு நோய்களைப் போக்கும் மருத்துவமுறை மூலிகை வைத்தியம்  ஆகும்.

கை வைத்தியம்
            நாட்டு வைத்திய முறைகளில் கைப்பக்குவம் என்பது முக்கிய இடம் பெறுகிறது. மருந்துப் பொருள்களை இடிப்பதும் அரைப்பதும், மருத்துவச் செயல்களாகக் கொண்டு இருந்தனா். இடித்து அரைத்து மருந்துகளின் சீரான தன்மையைக் கைவிரல்களால் தொட்டு தடவி பார்த்து அதன் பக்குவம் அறியப்படுகிறது. மருந்தின் அளவை ஒரு கைப்பிடி அல்லது ஒரு சிட்டிகை என்றும் சொல்லும் போக்கு கிராமங்களில் உண்டு. மருந்தைப் பதம் பார்க்க கைப்பக்குவம் பயன்படுவதால் நாட்டு மருத்துவத்திற்கு கை வைத்தியம் எனப் பெயா் வந்தது. தனக்கு வந்த நோயைத் தானே போக்கிக் கொள்வதற்குக் கை வைத்தியமே ஒரு முக்கிய பங்காக அமைகிறது.

பச்சிலை வைத்தியம்
            செடி வகையை சார்ந்த ஒரு வகை மூலிகை பச்சிலை எனப்படும். தாவரத்தின் இலைகள் நல்ல மணத்துடன் கசக்கினால் சாறு வரக்கூடியதாக இருக்கும். இதன் இலைகளும், விதைகளும், மருத்துவ குணமுடையவையாகச் சொல்லப்படுகிறது. தலைவலி, இருமல் போன்ற நோய்களுக்குப் பச்சிலை நல்ல மருந்தாக பயன்படுகிறது. நோய்களைத் தீா்ப்பதால் இதற்குப் பச்சிலை வைத்தியம் என்று பெயா்  வந்தது.

.கா.        அம்மை : வேப்ப இலை மீது படுக்க செய்தல்
                  காது வலி : சுரைக்காய் இலைச் சாறை கசக்கி காதில்                                                       விடுதல்
                  முதுகு வலி : புளியந் தழையை  ஒட்டுதல்

இராஜ வைத்தியம்
            மன்னா;கள் காலத்தில் மன்னனுக்கு மருத்துவம் பார்க்கும் அரண்மனை மருத்துவா் இராஜ வைத்தியா் என்றழைக்கப்பட்டார். புகழ்பெற்ற மருத்துவா் அவிசென்னா அரபி மன்னரின் அரசவை  மருத்துவராக 16  வது வயதில் நியமிக்கப்பட்டார், என்னும் செய்தி மூலம் அக்காலத்தில் அரண்மனை மருத்துவா்களின் முக்கியத்துவம் தெளிவாகிறது. அரசரின் நோய் தீா்க்கும் மருத்துவா் எடுத்தக் கொள்ளும் பெரும் முயற்சியையும் மருத்துவத்திற்கு உண்டாகும் பெரும் பொருள் செலவையும் மனதிற் கொள்ளும் மருத்துவ முறை இராஜ வைத்தியமாகும்.

இரகசிய மருத்துவம்
            நோயைக் குணமாக்கும் மருந்து மற்றும் அந்த மருத்துவ முறைகளை வெளியில் சொல்லாமல் தொழில் முறையில் செய்து வரும் மருத்துவ முறை இரகசிய மருத்துவ முறையாகும்

பாட்டி வைத்தியம்
உணவே மருந்து என்பது அனுபவ மொழி

            சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள், கீரை வகைகள், ஆகியவை மருத்துவ குணங்கள் மிக்கவையாக கருதப்படுகிறது. காலங்காலமாக வீட்டின் உணவுக் கூடங்கள் பெண்களின் பொறுப்பில் இருந்து வருவதால் இம்மருத்துவப் பயன் பாடுகளைப் பொரிதும் அவா்கள் அரிந்திருப்பார்கள்.

            உணவு வகைகள் பல குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளும். சிலரின் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இவற்றை அருகிலிருந்து பார்த்து தம் பட்டறிவால் அதனைச் சரிசெய்ய முயல்வதில் தாயே முதலிடம் வகிக்கிறாள். இந்தப் பழக்கம்வழக்கமானது. எனவே பாட்டி வைத்தியம் எனப் பெயா் வந்திருக்கலாம்.

            ஒரு நோயை குணப்படுத்துவதற்கு அக்காலத்தில் மரப்பட்டைகள், உணவுப்பொருட்கள், பச்சிலைகள், வேர்கள், கசாயம், காய்கள், கனிகள், செடிகள், தாவரக் கொழுந்துகள், தாவரங்களின் (பால்), பழங்கள், கீரைகள், போன்றவை பயன்படுத்தி சிறு குழந்தைகளில் இருந்து பொரியவா்கள் வரையும் இம்மருத்துவமுறையை பயன்படுத்தி நோய்களை குணப்படுத்திவருவதுண்டு.

     இது மட்டுமல்லாமல் கிராம மக்களிடையே நம்பிக்கை சார்ந்த மருத்துவத்தையும் பயன்படுத்துவதும் உன்டு. மருத்துவா் கூறும் மந்திரங்களை வெளியில் சொன்னால் நோய் குணமடையாது           (பழிக்காது) என்று குறிப்பிடுவதும் உன்டு. அவர்கள் பயன்படுத்டதும் மந்திரங்களை வேறு யாவறும் பயன்படுத்தமுடியாது. அவர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மட்டுமே இம்மந்திரம் சொல்லிக் கொடுக்கப்படும். இம்மருத்துவத்தை பரம்பரை மருத்துவம் என்று குறிப்பிடுவதுண்டு.

     இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கில மருத்துவம் அளவு கடந்து இருந்தாலும் சில மலை வாழ் மக்களிடம் மற்றும் கிராம மக்களிடமும் இவ்வகையான நாட்டு மருத்துவத்தை கைவிடுவதுயில்லை.



மனிதாபிமானம் - சிறுகதை

மனிதாபிமானம்

ஒர் ஊரில் நான்கு நண்பர்கள். ராமு, சோமு, பாலா, சுப்ரமணி ஆகியோர்.  இவர்கள் ஒரே பள்ளியில் பயின்று வந்தனா். பள்ளிக்குச் செல்லும்போது ஒரே நேரத்தில் செல்வதும் வகுப்பறையில் நான்கு பேரும் ஒரே பலகையில் அமா்வது பழக்கமாக இருந்தது. எல்லா பாடவேளையிலும் ஒவ்வொரு பாட ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பது உண்டு. அன்று ஒருநாள் கணிதப் பாடவேளையில் ஆசிரியரைப் பார்த்து பாலா ஒரு வினாவை எழுப்பினான்.

சார் நீங்கள் நடத்துவது எனக்கா? இல்ல எல்லாருக்குமா?
  
ஆசிரியா் - ஏன்டா!?

இல்ல….. நீங்க என்னை மட்டும் பார்த்து வகுப்பு எடுக்குரிங்க,

ஆசிரியா் - ரொம்ப அழகா இருக்க அதனால தான் உன்னையே பாத்தன்டா!

 சரி. சரி.

ஏதோ…… நீங்களாவது நான் அழகா இருக்கனு சொன்னீங்களே  நன்றி சார்.

 இவ்வாறெல்லாம் பாடவேளையில் சிறு சிறு குறும்பு செய்து படித்துப் பருவத்தேர்வுகளை முடித்துவிட்டு அரையாண்டுத் தேர்வு எழுதினார்கள். இவர்களுடைய தேர்வு எண்ணும் ஒன்றுக்குப் பின் ஒன்றாகவே அமைந்திருந்தது. தேர்வறையில் ஆசிரியர் ராமுவை பார்த்து - தமிழ் முதல்தாள் எப்படி? இருந்தது என்றார்.
அது எளிமையாக இருந்தது சார்.

ஆனா,

இரண்டாவது தாளில் ஒரு சந்தேகம்.

என்னடா? சந்தேகம்.    

5 -  வது கேள்விக்குப் பதில் தெரியவில்லை சார். 

7 - வது    பதிலுக்கான கேள்வியே இல்லை சார்.

தேடிப்பாருடா இருக்கும்.

தேர்வு  முடிந்ததும் கணித பாடவேளையில் தேர்வுத் தாள்கள் திருத்தி மாணவா்களுக்கு கொடுக்கப்பட்டது. பாலாவிற்கு மட்டும் கொடுக்கவில்லை.

சார் என்னோட பேப்பர் மட்டும் வரவில்லை. 
எல்லோரும் நன்றாக தேர்வை எழுதியுள்ளார்கள்.

ஏன்டா நீ மட்டும் நல்லா எழுதல?

சார் அந்த கொஸ்டீன் பேப்பரை படிங்க, dy/dx+y*x = ? என்பதனை தீா்க்க?

உங்க பிரச்சனையே தீா்க்க முடியவில்லை சார்,

பின்னே! எப்படி கணக்க தீா்க்க முடியும்.

ஆசிரியா் கோபத்தால் திட்டிவிடுவார். பாலா இரண்டு நாட்களாகவே பள்ளிக்கு வரவில்லை. அவனது நண்பர்கள் மூவரும் சென்று ஆறுதல் சொன்னார்கள்.

ஒரு மகிழ்ச்சியான செய்தியும் கூட, பாலா

என்னடா?


பள்ளியில் இருந்து சுற்றுலா ஏற்படுத்தியிருக்காங்கடா, 
என்ன போலாமாடா…….. போகலாம் என்றான் பாலா. பள்ளி மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து பேருந்து வசதியை ஏற்படுத்தி சுற்றுலாவுக்குச் சென்றார்கள். சென்ற இடத்தில் விபத்து ஏற்பட்டதைக் கண்டனர். அந்த விபத்தை பார்த்தவுடன் இறங்கி சென்ற நண்பா்கள் நால்வரும் அடிபட்டவா்களை தாங்கள் வந்த பேருந்திலேயே  ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனா். பாலா ஒன்றும் பயமில்லை என்று மருத்துவா் சொன்னார். மகிழ்ச்சியடைந்த நான்கு பேரும்  சுற்றுலாவிற்கு  பயணம் செய்து மகிழ்ச்சியாக வந்து வீடு திரும்பினார்கள்.
“யாமிருக்க பயமேன்” - என்று குறிப்பிடுவது போல மனிதாபிமானம் கொண்ட நால்வரும் யாருக்கும் உதவி செய்ய காத்திருக்கின்றார்கள்.