Monday, April 25, 2016

மனிதாபிமானம் - சிறுகதை

மனிதாபிமானம்

ஒர் ஊரில் நான்கு நண்பர்கள். ராமு, சோமு, பாலா, சுப்ரமணி ஆகியோர்.  இவர்கள் ஒரே பள்ளியில் பயின்று வந்தனா். பள்ளிக்குச் செல்லும்போது ஒரே நேரத்தில் செல்வதும் வகுப்பறையில் நான்கு பேரும் ஒரே பலகையில் அமா்வது பழக்கமாக இருந்தது. எல்லா பாடவேளையிலும் ஒவ்வொரு பாட ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பது உண்டு. அன்று ஒருநாள் கணிதப் பாடவேளையில் ஆசிரியரைப் பார்த்து பாலா ஒரு வினாவை எழுப்பினான்.

சார் நீங்கள் நடத்துவது எனக்கா? இல்ல எல்லாருக்குமா?
  
ஆசிரியா் - ஏன்டா!?

இல்ல….. நீங்க என்னை மட்டும் பார்த்து வகுப்பு எடுக்குரிங்க,

ஆசிரியா் - ரொம்ப அழகா இருக்க அதனால தான் உன்னையே பாத்தன்டா!

 சரி. சரி.

ஏதோ…… நீங்களாவது நான் அழகா இருக்கனு சொன்னீங்களே  நன்றி சார்.

 இவ்வாறெல்லாம் பாடவேளையில் சிறு சிறு குறும்பு செய்து படித்துப் பருவத்தேர்வுகளை முடித்துவிட்டு அரையாண்டுத் தேர்வு எழுதினார்கள். இவர்களுடைய தேர்வு எண்ணும் ஒன்றுக்குப் பின் ஒன்றாகவே அமைந்திருந்தது. தேர்வறையில் ஆசிரியர் ராமுவை பார்த்து - தமிழ் முதல்தாள் எப்படி? இருந்தது என்றார்.
அது எளிமையாக இருந்தது சார்.

ஆனா,

இரண்டாவது தாளில் ஒரு சந்தேகம்.

என்னடா? சந்தேகம்.    

5 -  வது கேள்விக்குப் பதில் தெரியவில்லை சார். 

7 - வது    பதிலுக்கான கேள்வியே இல்லை சார்.

தேடிப்பாருடா இருக்கும்.

தேர்வு  முடிந்ததும் கணித பாடவேளையில் தேர்வுத் தாள்கள் திருத்தி மாணவா்களுக்கு கொடுக்கப்பட்டது. பாலாவிற்கு மட்டும் கொடுக்கவில்லை.

சார் என்னோட பேப்பர் மட்டும் வரவில்லை. 
எல்லோரும் நன்றாக தேர்வை எழுதியுள்ளார்கள்.

ஏன்டா நீ மட்டும் நல்லா எழுதல?

சார் அந்த கொஸ்டீன் பேப்பரை படிங்க, dy/dx+y*x = ? என்பதனை தீா்க்க?

உங்க பிரச்சனையே தீா்க்க முடியவில்லை சார்,

பின்னே! எப்படி கணக்க தீா்க்க முடியும்.

ஆசிரியா் கோபத்தால் திட்டிவிடுவார். பாலா இரண்டு நாட்களாகவே பள்ளிக்கு வரவில்லை. அவனது நண்பர்கள் மூவரும் சென்று ஆறுதல் சொன்னார்கள்.

ஒரு மகிழ்ச்சியான செய்தியும் கூட, பாலா

என்னடா?


பள்ளியில் இருந்து சுற்றுலா ஏற்படுத்தியிருக்காங்கடா, 
என்ன போலாமாடா…….. போகலாம் என்றான் பாலா. பள்ளி மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து பேருந்து வசதியை ஏற்படுத்தி சுற்றுலாவுக்குச் சென்றார்கள். சென்ற இடத்தில் விபத்து ஏற்பட்டதைக் கண்டனர். அந்த விபத்தை பார்த்தவுடன் இறங்கி சென்ற நண்பா்கள் நால்வரும் அடிபட்டவா்களை தாங்கள் வந்த பேருந்திலேயே  ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனா். பாலா ஒன்றும் பயமில்லை என்று மருத்துவா் சொன்னார். மகிழ்ச்சியடைந்த நான்கு பேரும்  சுற்றுலாவிற்கு  பயணம் செய்து மகிழ்ச்சியாக வந்து வீடு திரும்பினார்கள்.
“யாமிருக்க பயமேன்” - என்று குறிப்பிடுவது போல மனிதாபிமானம் கொண்ட நால்வரும் யாருக்கும் உதவி செய்ய காத்திருக்கின்றார்கள்.


No comments:

Post a Comment